#ஈரோடு || வாடகை வீட்டில் பாலியல் தொழில்.. தம்பதி கைது..!

வாடகை வீட்டில் பாலியல் தொழில் செய்து வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நல்லூர் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர்கள் கோவை மாவட்டம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது, அவருடைய மனைவி மோகனாவுடன் நல்லூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. 

அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் . மேலும், அவர்களிடம் இருந்த பெண்கள மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.