பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு எப்போது? எங்கு தெரியுமா? அதிசயிக்க வைத்த படக்குழு!

எழுத்தாளர் கல்கியின் மிகவும் புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கி வருகிறார்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

image

அதன்படி, PS 1 என்ற பொன்னியின் செல்வன் இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் எதிவரும் ஜூலை மாதம் முதல் வாரம் PS 1ன் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுவும் சோழர்களின் பூமியான தஞ்சாவூரில். ஏனெனில் பொன்னியின் செல்வன் கதை தஞ்சை மண்ணுடன் நெருங்கிய தொடர்புடையதால் அங்கு படத்தின் டீசரை பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

டீசர் வெளியீட்டுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தை உலகளவில் புரொமோட் செய்வதற்கான திட்டத்தையில் படக்குழு கையில் வைத்துள்ளதாம். பொன்னியின் செல்வன் படத்தின் திரைக்கதையை மணிரத்னமும், குமரவேலும் இணைந்து உருவாக்க, ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

ALSO READ: ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸாக மிரட்டிய சூர்யாவுக்கு பரிசளித்த கமல் – வைரலாகும் புகைப்படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.