பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – குழந்தை உட்பட 22 பேர் பலி!

பாகிஸ்தான் நாட்டில், பயணியர் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் மலைப்பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. ஜோப் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பிறகு, கில்லா சைஃபுல்லா பகுதிக்கு அருகே மலை உச்சியில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உட்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சிலர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்க தடை – அரசு அதிரடி உத்தரவு!

இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.