பீகார்: ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி!அதிர வைக்கும் பின்னணி!

பீகாரில் ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சம்பரன் மாவட்டத்தின் பெட்டியாவில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் கூக்குரல் கேட்டு மக்கள் அளித்த தகவலில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேருந்தில் ஆய்வு செய்தனர்.
image
அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி அரை மயக்கத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக பேருந்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், பேருந்து ஓட்டுநர், உதவியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Minor Girl Gang-raped In Bus In Bihar, 2 Arrested
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாகவுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஓட்டுநரும், அவனது உதவியாளரும் தனக்கு மாத்திரை அடங்கிய குளிர்பானம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.