மனைவியுடன் கள்ளத்தொடர்பு உறவினரை கொன்றவர் கைது| Dinamalar

மைசூரு : மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த உறவினரை, விவசாயி வெட்டி கொலை செய்தார்.மைசூரின் நஞ்சன்கூடு அருகே உள்ள மாட்ரள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தஷெட்டி, 47. இவரது உறவினர் சிவண்ணா, 59. விவசாயிகளான இவர்கள் இருவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவை சிவண்ணாவும், தங்கையை சித்தஷெட்டியும் திருமணம் செய்துள்ளனர்.இந்நிலையில் சித்தஷெட்டிக்கு, தன் மனைவியின் அக்காவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விஷயம் சிவண்ணாவுக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி இருவரையும் எச்சரித்தார். ஆனாலும் அவர்கள், கள்ளக்காதலை தொடர்ந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிவண்ணாவும், சித்தஷெட்டியும் நேரில் சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிவண்ணா, சித்தஷெட்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அரிவாளுடன் நஞ்சன்கூடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.