சசிகலா மீதான வழக்குஆக., 29க்கு ஒத்திவைப்பு| Dinamalar

பெங்களூரு : சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதி செய்து கொடுக்க, அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, அவரது அண்ணி இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு, அவர்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க, அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில், சசிகலா, இளவரசி, பெங்களூரு ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் மார்ச் 11ல் ஆஜராகினர்.

இருவரிடமும் பிணை பத்திரம் பெற்று, அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. மேலும், நேரில் ஆஜராவதற்கு, ஏப்ரல் 16ல் நீதிமன்றம் விலக்கு அளித்தது.நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நேரில் ஆஜராவதற்கு விலக்கு பெற்றிருந்தால், சசிகலா, இளவரசி ஆஜராகவில்லை. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் வராததால், விசாரணை ஆகஸ்ட் 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.