சேலம் மாவட்டம்.! இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.!

சேலம் மாவட்டத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னாகவுண்டனூர் சென்ட்ராயன்காடு பகுதியை சேர்ந்தவர் சி.பி.ஜெகதீசன். இவர் சின்னாகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவராவார்.

இவர் வழக்கம் போல் ஊராட்சி மன்றத்தில் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது சின்னாகவுண்டனூர் இடையூர் இணைப்புச்சாலை பகுதியில் சாலையைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொரு வாகனத்தில் வந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இந்த விபத்து குறித்தும், மற்றொரு வாகனத்தில் வந்த இளைஞர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.