குடும்ப பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

குடும்ப பிரச்சனை காரணமாக முன்னாள் ராணுவவீரர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சொல்லோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.  ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக அவர் குடும்பத்துடன் சுசீந்திரம் தேரூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், ஏடிம் மையங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் செக்கியூரிட்டியாக பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால், அவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. வழக்கம் போல வேலைக்கு செல்ல தயாரான இவர், வீட்டில் உள்ள தனி அறைக்குச் சென்று கதவை மூடியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அறைக்கு சென்று பார்த்த போது அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.