பரிசு பெற வந்த போது கீழே விழுந்த பெண் : பதறிய ஆளுநர் தமிழிசை – ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தார்.

ரோவில் சர்வதேச நகரத்தில் நடைபெற்ற மெகா தூய்மைபடுத்தும் பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரிடம் பரிசு பெற வந்த போது கால் இடறி கீழே விழுந்த பெண்மணியை நாற்காலி போட்டு அமர வைத்து, ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சுற்றுலா துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘எம்ப்ரெஸ்’ சொகுசு கப்பலில், சூதாட்டம் சார்ந்த நடவடிக்கைகள் நடைபெறாது என உறுதி செய்த பிறகு தான் அந்த கப்பல் புதுச்சேரி கடல் எல்லைக்குள் அனுமதிக்கப்படும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.