நயன்தாரா சமந்தாவை தேடும் பிங்க் போலீஸ்
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். மோகன்லால், சுரேஷ்கோபி என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் இவர், தற்போது பிரித்விராஜ் நடிப்பில் கடுவா மற்றும் மோகன்லால் நடிப்பில் அலோன் என இரண்டு படங்களை இயக்கி ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் ஷாஜி கைலாஷ். எழுத்தாளர் இந்துகொபன் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்..
குறிப்பாக இந்த படத்தின் கதை பெண் போலீசாரை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்திற்கும் பின்க் போலீஸ் என்றே டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதால் அதில் நடிப்பதற்கு நயன்தாரா, சமந்தா மற்றும் வித்யாபாலன் இந்த மூவரில் ஒருவரை எப்படியாவது ஒப்பந்தம் செய்துவிட வேண்டுமென்று ஷாஜி கைலாஷ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.