பலத்த கட்டுப்பாடுகள்.. களைகட்டியது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் பலத்த கட்டுப்பாடுகளுக்கு நடுவே இன்று நடைபெறுகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணம் இன்று காலை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள ஷெரட்டன் க்ரான்ட் ரிசார்ட்டில் நடக்க இருக்கும் இந்த நிகழ்வில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இன்று காலை 7.30 மணிக்கு நிகழ்வு துவங்கி நடைபெற்று வருகிறது. 

உள்ளே செல்பவர்கள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்பது மாதிரியான பலத்த கட்டுப்பாடுகளுக்கு நடுவே நடைபெறுகிறது திருமணம். இந்த நிகழ்வு நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக பிரத்யேகமாக பதிவு செய்யப்படுவதால் செல்போன் கேமிராக்களில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ள அனுமதிக்கும் அளவுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. ரிசார்டின் பின்புறம் உள்ள கடற்கரைக்குச் செல்லவும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

image

200க்கும் மேற்பட்ட பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில் ரஜினி, விஜய், அஜித் உட்பட பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திருமணத்திற்காக நேரில் சென்று அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இதில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. காலை 11 மணிக்குள் இந்த நிகழ்வு நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

image

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் இயக்குநர் மணிரத்னம், மோகன்ராஜா, பொன்வண்ணன், கலா மாஸ்டர், ரெபா மோனிகா ஜான், புகைப்படக்கலைஞர் சிற்றரசு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் ஆனந்த் ஷங்கர் வந்திருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பங்கேற்பார் என எதிர்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாம்: லோகேஷுக்கு கமல் தந்த LEXUS சொகுசு காரில் இத்தனை ஸ்பெஷலா? #Lexus #Vikram

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.