தினேஷ் கார்த்திக்கு கல்தா? ஷாக் கொடுத்த ராகுல் டிராவிட்



தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்க தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் நேற்று நடைபெற்ற பயிற்சி முகாம் தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் அதில் தினேஷ் கார்த்திக் தென்படவில்லை.

தினேஷ் கார்த்திக்கை பினிஷர் ரோலுக்காக தான் தேர்வுக்குழுவினர் இந்திய அணியில் தேர்வு செய்தனர். ஆனால் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஏற்கனவே அணியில் உள்ளனர்.

இந்த நிலையில், மிடில் ஆர்டரில் 3வது வீரராக இஷான் கிஷனையும், 4வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரையும், 5வது வீரராக தீபக் ஹூடாவையும் சேர்க்க அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.


இதனை உறுதிப்படுத்தும் விதமாக பயிற்சி முகாமில் இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர். மேலும் ஹர்திக் பாண்டியா மீது ராகுல் டிராவிட் தனி கவனம் செலுத்தி ஏதோ அறிவுரைகளை கூறி இருந்தார்.

எப்போதும் பயிற்சி முகாமில் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்களுக்கு தான் அதிக நேரம் பேட்டிங் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்,
இதனால் தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்ப்பதை விட தீபக் ஹூடாவை தான் அணியில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.