தங்க கடத்தலில் கேரள முதலமைச்சருக்கு தொடர்பு என குற்றச்சாட்டு… பதவி விலக கோரி எதிர்கட்சிகள் போராட்டம்!

தங்கம் கடத்தலில் கேரள முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா சுரேஷ் கூறியதை தொடர்ந்து எதிர்கட்சிகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். மேலும் மாநிலம் முழுவதும் கருப்பு தினமும் கடைபிடிக்கப்பட்டது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல்கள் வழியாக தங்கம் கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னா நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் தங்கம் வெளிநாட்டுக்கு கடத்தலில் பினராய் விஜயன், அவரது மனைவி மகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.