மகள்களை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்… மன உளைச்சலால் எடுத்த விபரீத முடிவு..!

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை சேர்ந்தர் ஃபர்கான். இவருக்கு திருமணமாகி சபீனா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் சபீனா தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முன்பு சபீனா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தற்கொலைகள் யாரும் காரணம் இல்லை எனவும் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததால் எந்த முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

 மேலும், தனது குழந்தைகள் தனது இறப்பிற்கு பின் தனியாக இருக்கும் என்பதால் அவர்களையும் கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.