எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்சே| Dinamalar

கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.

நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் கூட வாங்க முடியாத அளவுக்கு அந்த நாடு திணறுகிறது. இதற்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயை பிரதமராக கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகளும் அடங்கிய கூட்டணி அரசு அமைந்துள்ளது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியில் இலங்கை போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, தனது எம்.பி., பதவியை இன்று (ஜூன் 9) ராஜினாமா செய்தார். இலங்கை பார்லிமென்ட் செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே வழங்கினார். எம்.பி., பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.