இரவில் மறைந்திருந்து ஆபாச வீடியோ.. திருடனுக்கு விரித்த வலையில் சிக்கிய இளைஞர்!

நெல்லையில் சுவர் ஏறிக் குதித்து பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்த இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பாளையங்கோட்டை ராஜேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால் ராபின்சன். இவர் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காலனி பகுதிக்கு அடிக்கடி சென்று வீட்டின் சுவர் ஏறிக் குதித்து பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட ஆபாச வீடியோக்களை எடுத்து வந்துள்ளார்.
image
இந்நிலையில், சமீபகாலமாக காலனி பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் சந்தேகமடைந்தனர். இதையடுத்து புதன்கிழமை இரவு வழக்கம்போல் பால் ராபின்சன் தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து அவரை படம் எடுத்துள்ளார்.
இதையடுத்து எதிர்பாராதவிதமாக அதை கவனித்த அந்தப் பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டைச்சுற்றி தேடுதல் நடத்தினர். அப்போது பால் ராபின்சன் அருகிலுள்ள பூங்காவில் மறைந்து கொண்டார்.
image
இதனை கவனித்த அப்பகுதி இளைஞர்கள் அவரை பிடித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பால் ராபின்சன் இதுபோன்று பல பெண்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்தது தெரியவந்துள்ளது.
அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதிலுள்ள காட்சிகளை வைத்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரிலும், பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாச செயல்களை புரிதல், ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரை தாக்குதல், ஒருவரின் அந்தரங்க பகுதியை அவருக்குத் தெரியாமல் படம் எடுத்தது அதை வெளியிடுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
image
அரசு ஊழியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அதிகம் வசிக்கும் பெருமாள்புரம் பகுதியில் இப்படி ஒருவர் பிடிபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீடியோ எடுப்பதற்காக மட்டும் இவர் சென்றாரா அல்லது வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஏதேனும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.