மனிதர்களின்றி கழிவுநீரை அகற்றும் பணியில் ரோபோக்கள்… சென்னை ஐஐடியின் புதிய முயற்சி!

கழிவுநீர் தொட்டிகளை மனிதத் தலையீடு இன்றி சுத்தம் செய்வதற்கான பணியில் சென்னை ஐஐடியின் ‘ஹோமோசெப்’ என்ற ரோபோ ஈடுபடுத்தப்பட உள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 10 இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், தூய்மைப் பணியாளர்களே அதனை இயக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்த ரோபோ இயந்திரங்களை அமைக்க திட்டமிடப்படுவதாக சென்னை ஐஐடி குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.