பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருமணமான நபர்.. போக்சோவில் கைது.!

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லத்திராகோட்டையில் கணேசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணேசன் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.