இந்தியாவிலேயே முதல் முறை… தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து இளம்பெண்..!

குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஷாமா பிந்து, எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.

சோஷியாலஜி பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷாமா பிந்து, தன்மீதான சுய காதலால் ஜூன் 11ம் தேதி சோலோகாமி முறையில் தன்னைத் தானே திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.

இந்த திருமணத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், திட்டமிட்டதற்கு 2 நாட்கள் முன்னதாகவே ஷாமா பிந்து, தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.

மெஹந்தி, ஹல்தி உள்ளிட்ட அனைத்து சடங்குகளையும் பின்பற்றி வீட்டிலேயே அவரது திருமணம் எளிமையாக நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.