தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளுக்கு தென்மேற்குப் பருவமழை முன்னேறுவதற்குச் சாதகமான சூழல் நிலவுகிறது – இந்திய வானிலை ஆய்வு துறை

தென்மேற்குப் பருவமழை தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் முன்னேறுவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

கோவா, தெற்கு மகாராஷ்டிரம், கர்நாடகத்தின் பெரும் பகுதிகள், தெற்கு ஆந்திரம் ஆகிய பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை முன்னேறும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அதேநிலை நீடித்தால் மேலும் இரு நாட்களில் மகாராஷ்டிரத்தின் பெரும்பகுதிகள், கர்நாடகத்தின் முழுப் பகுதி, ஆந்திரத்தின் பெரும்பகுதிக்குப் பருவமழை முன்னேற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.