சீனர்களுக்கு விசா மோசடி: கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்கு நிபந்தனை ஜாமின்…

டெல்லி: சீனர்களுக்கு விசா மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின்போது, ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது,  இந்தியாவில் சீனர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி விசா பெற்றுத் தர 50 லட்சம் ரூபாயை அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  வாங்கியதாக  சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் (2022 மே மாதம்) அவருக்குச் சொந்தமான 10-கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது,  விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ காவல்துறையினர் கைது செய்து, டெல்லி திகார் சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. அதன்படி, கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜரானார்.  இதற்கிடையில் அவர் தாக்கல் செய்த பெயில் பெட்டிசனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தீர்ப்பு வழங்காமல், வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

இதனிடையே கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன்  ஜாமீன் கோரி  அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இரண்டு லட்ச ரூபாய் பிணைத் தொகை மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.