சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் சோப்தார்!

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றங்கள் நீதிபதிகள் தங்களது அறையிலிருந்து நீதிமன்ற விசாரணை அறைக்கு வந்துசெல்லும்போது, நீதிபதிகள் எளிதாக கூட்டத்தை கடந்து செல்லும் வகையில் சோப்தார்கள் முன் செல்வர். வெள்ளை உடை அணிந்து, தேசிய சின்னம் பொதித்த சிகப்பு தலைப்பாகை, உடலின் குறிக்கே சிகப்பு பட்டை அணிந்து, செங்லோலை ஏந்தி, வழிவிடும்படி ஒலி கூறிக்கொண்டே நீதிபதிகளுக்கு முன்னர் செல்வர். காலை முதல் மாலை வரை நீதிபதி இருக்கும் இடத்திலேயே இருப்பர்.
இதையும் படிங்க… இண்டிகோ விமான ஊழியர் மீது ‘பீஸ்ட்’ நடிகை பூஜா ஹெக்டே வைத்த குற்றச்சாட்டு – என்ன நடந்தது?
image
இந்த பணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உதவியாளர் பணிக்கு தேர்வாகி பணியாற்றி வந்த அந்தப் பெண்ணை, தனக்கு சோப்தாராக நியமிக்கும்படி பெண் நீதிபதி ஒருவர் கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.