TTDC: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள், தாங்கள் பயணம் மேற்கொள்ள உள்ள தேதிக்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பயண டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது.

இந்த நிலையில், திருப்பதிக்கு வருகைதரும் வெளிமாநில பக்தர்களின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் குறைத்த விவரங்கள், அவர்கள் பயண மேற்கொள்ளும் தினத்துக்கு ஏழு நாட்களுக்கு முன்பே, தங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் 15 ஆம் தேதியில் இருந்து (ஜூன் 15) அமலுக்கு வருவதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் தினசரி சுற்றுலா பயணத் திட்டத்தின் மூலம் திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள், தங்களது பயணத்தை இனி ஏழு நாட்களுக்கு முன் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுவதாக TTDC நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் 15 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 044 -2533 3333, 044 -2533 3444, 180042531111 ஆகிய எண்களை கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.