மீண்டும் நடிக்க வந்தது ஏன்? – நஸ்ரியா

நானி, நஸ்ரியா நடித்துள்ள அடடே சுந்தரா படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. படத்தை விவேக் இயக்கியுள்ளார். படம் நாளை(ஜூன் 10) வெளியாகிறது. படம் குறித்து நானி கூறுகையில், ''மொழிகளை கடந்து இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். காதலும், நகைச்சுவையும் கலந்த படம் அடடே சுந்தரா,'' என்றார்.

நஸ்ரியா கூறுகையில், ''நானி உடன் பணியாற்றியது மகிழ்ச்சியான ஒன்று. காதல் கதை என்றாலே தமிழக ரசிகர்கள் ஊக்கமும், ஆதரவும் அளிப்பர். அடடே சுந்தராவுக்கும் ஆதரவு தர வேண்டும். என் கணவர் பகத்பாசில் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றார். நிறைய கதைகளை கேட்டேன். இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன்,'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.