ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 3 இடங்கள் உட்பட தமிழகத்தில் மொத்தமாக 8 இடங்களிலும் காரைக்காலில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறையைச் சேர்ந்த சாதிக் பாஷா எனப்படும் இக்காமா பாஷா, அவனது கூட்டாளிகள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாதிக் பாஷா பல்வேறு இயக்கங்களை தொடங்கி பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்ததை அடுத்து விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெறுகிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.