தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற மாணவருக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பள்ளபட்டி கிராமத்தில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருங்குடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திக் ராஜா தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் காரியாபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி, கார்த்திக் ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக் ராஜாவின் உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.