மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு| Dinamalar

சியோல்:தென் கொரியாவில், நீதிமன்றம் அருகே அலுவலக கட்டடம் ஒன்றில் மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.
கிழக்காசிய நாடான தென் கொரியாவின் டேகு நகரில், மாவட்ட நீதிமன்ற கட்டடத்துக்கு அருகில், ஏழு மாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு, வழக்கறிஞர்கள் உட்பட பலர் அலுவலகங்கள் வைத்திருந்தனர். இதன் இரண்டாவது தளத்துக்கு நேற்று காலை சிறு சிலிண்டருடன் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த ஒரு அலுவலகத்துக்கு தீ வைத்தார்.

அது மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியது.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருந்தும், தீயில் சிக்கி ஏழு பேர் உடல் கருகி இறந்தனர். காயம் அடைந்த 41 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இறந்தவர்களில், கட்டடத்துக்கு தீ வைத்த அடையாளம் தெரியாத நபர் உடலும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.