புதிய அட்டவணை தயாரிக்கிறது ரயில்வே| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை-தெற்கு ரயில்வேயில், புதிய கால அட்டவணை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

latest tamil news

இதில், ரயில்களின் வேகம் அதிகரிப்பதோடு, புதிய ரயில்கள் அறிவிப்பு இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு ரயில்வேயில் நுாற்றுக்கணக்கான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் புதிய கால அட்டவணை வெளியிடும்போது, பயணியரின் கோரிக்கைகள் சேர்க்கப்படும்.

latest tamil news

அதுபோல, நிர்வாக ரீதியான மாற்றங்களையும் கொண்டு வருவோம். அதன்படி, தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணையை, அடுத்த மாதம் வெளியிட உள்ளோம்.தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.

இதனால், பயணியரின் பயண நேரம் குறையும். அதுபோல், பல்வேறு வழித்தடங்களில் புதிய ரயில்கள் இயக்கவும் வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.