சபரிமலையில் லட்சார்ச்சனை, சிறப்பு களபாபிஷேகம்| Dinamalar

சபரிமலை: பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலையில் லட்சார்ச்சனை, சிறப்பு களபாபிஷேகம் நடந்தன. பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நேற்று அதிகாலை நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தினார். வழக்கமான பூஜைகள் தொடங்கின. சன்னதி முன்புறம் மண்டபத்தில் லட்சார்ச்சனை நடைபெற்றது. தந்திரி, மேல்சாந்தி தலைமையில் பூஜாரிகள் கலந்து கொண்டனர்.

மதியம் உச்சபூஜைக்கு முன் களபம் பூஜிக்கப்பட்டு பவனியாக எடுத்து வரப்பட்டு அபிேஷகம் செய்யப்பட்டது. இரவு 7:00 மணிக்கு படி பூஜை, 9:00 மணிக்கு அத்தாழ பூஜை நடத்தப்பட்டு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.