பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பசில் ரோஹன ராஜபக்க்ஷ இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தார்

பாராளுமன்ற உறுப்பினர் பசில் ரோஹன ராஜபக்க்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் நேற்று(09) கையளித்தார்.

இவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2021ஆம் ஆண்டு ஜூலை 08ஆம் திகதி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் சில மாதங்கள் நிதி அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.

பசில் ரோஹன ராஜபக்ஷ அவர்கள் இதற்கு முன்னர் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)

இலங்கை பாராளுமன்றம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.