3000Metres Steeplechase பலதடை ஓட்டப் போட்டியில் ,செல்வி அருட்செல்வன் பிரதீஷாவுக்கு இரண்டாம் இடம்

திருகோணமலை சல்லி அம்பாள் மகா வித்தியாலய மாணவியான செல்வி அருட்செல்வன் பிரதீஷா, சுகததாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கனிஷ்ட தேசிய தடகள போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றார்.

கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ,3000Metres Steeplechase போட்டியில் அருட்செல்வன் பிரதீஷா தேசிய மட்ட கனிஷ்ட தடகள போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றார்.

இந்த மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் முரளி தலைமையில் இன்று( 10)இடம்பெற்றது.

சிறப்பு விருந்தினராக திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளரான எஸ்.சிறீதரன் மற்றும் ஆசிரியர்கள் அதிபர் பெற்றார்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.