மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய மனைவி

விழுப்புரம் மாவட்டத்தில், மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் மனைவி கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த நடராஜன் தினமும் மது அருந்தி விட்டு மனைவி குப்பம்மாளை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து குப்பம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் 2 முறை அவரை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

நேற்றிரவு மீண்டும் மது போதையில் தகராறு செய்த நடராஜனின் முகத்தில் சூடான ரசத்தை குப்பம்மாள் ஊற்றி உள்ளார். வெந்து போன முகத்துடன் காவல் நிலையம் வந்த நடராஜனை போலீசார் சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.