பெட்ரோல் தட்டுப்பாடா? வதந்தி என விளக்கம்!| Dinamalar

புதுடில்லி : பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் நேற்று தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு பெட்ரோல் பங்க்குகள் முன் ஏராளமானோர் திரண்டனர். இதனால் நீண்ட வரிசை காணப்பட்டது.

இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று இரவு அளித்த விளக்கத்தில், ‘போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.