பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி போராட்டம்.. மதுபானக்கடை மீது மாட்டுச்சாணம் வீசிய உமா பாரதி.!

மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி பாஜக மூத்தத் தலைவர் உமா பாரதி, மதுபானக்கடை மீது மாட்டுச்சாணம் வீசியுள்ளார்.

நிவாரி மாவட்டத்தில் உள்ள உர்ச்ஷா நகரில் உமா பாரதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த மதுபானக்கடை மீது மாட்டுச்சாணத்தை வீசி தனது எதிர்ப்பை காட்டினார்.

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் போபாலில் உள்ள ஆசாத் நகரில் மதுபான கடைக்குள் புகுந்து உமா பாரதி கற்களை வீசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.