கடும் நிதி நெருக்கடி: தெற்கு சூடானுக்கு உணவு நிவாரணம் நிறுத்தம்!

நிதிப் பிரச்னை காரணமாக, தெற்கு சூடான் நாட்டிற்கு, உணவு நிவாரணம் நிறுத்தப்படுவதாக, ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிவர்களாகவும் உள்ளனர்.

அங்குள்ள மக்களுக்கான உணவு தேவைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிவாரணப் பிரிவு சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருமண மோசடி: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 7 மாதம் சிறை

இந்நிலையில் நிதிப் பிரச்னை காரணமாக தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிவாரணப் பிரிவு தெரிவித்து உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், உணவு நிவாரணம் நிறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளதால், தெற்கு சூடானில் சுமார் 17 லட்சம் மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.