போட்டோகிராபர்களைப் பார்த்து ஆச்சரியமாகக் கேட்ட ராஷ்மிகா

பாலிவுட்டிலும், ஹாலிவுட்டைப் போல 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதாவது பிரபலங்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேறிய நிமிடம் முதல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வரை அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களை எடுப்பவர்களை 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் என்றழைப்பார்கள்.

இப்படியான பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் துரத்தியதால் தான் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் இளவரசி டயானா விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் என்று சொல்வார்கள்.

பாலிவுட்டில் இப்போதும் நடிகைகள் வீட்டை விட்டு வெளியில் வந்து ஷாப்பிங் சென்றால், ஜிம்முக்குச் சென்றால், படப்பிடிப்புக்குச் சென்றால், நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் அவர்கள் பின்னால் சென்று பல பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் போட்டி போட்டு படமெடுப்பார்கள். அவர்களுக்காக நடிகைகளும் சில நிமிடங்கள் ஒதுக்கி போஸ் கொடுப்பார்கள்.

அப்படி சில கலைஞர்கள் நடிகை ராஷ்மிகாவை புகைப்படம் எடுத்த போது, “இந்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்,” என அப்பாவியாக சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டார். அந்தப் புகைப்படங்கள் பல இணையதளங்களில் வெளிவருவதை ராஷ்மிகா இதுவரை பார்த்திருக்க மாட்டாரோ ?.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.