90 நாட்கள் கழித்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி… தமிழ்நாட்டில் இன்று 476 பேருக்கு பாதிப்பு…

90 நாட்கள் கழித்து 17-3-2022 க்குப் பின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 121, செங்கல்பட்டில் 95, திருவள்ளூரில் 20 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 26, நீலகிரியில் 23, கன்னியாகுமரியில் 20, சேலத்தில் 6, திருச்சி மற்றும் வேலூரில் 5, ராணிப்பேட்டை, திருநெல்வேலி, கடலூர் மற்றும் மதுரையில் 4, கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடியில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த 2 பேருக்கும், அமெரிக்கா மற்றும் மலேசியா-வில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 14,212 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 257 ஆண்கள் 219 பெண்கள் என மொத்தம் 476 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

169 பேர் இன்று குணமடைந்த நிலையில் 1938 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.