பப்ஜி விளையாட்டால் நேர்ந்த விபரீதம்.. நண்பனை கத்தியால் குத்திய இளைஞர்..!

பப்ஜியால் ஏற்பட்ட தகராறில் நண்பனை குத்திய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாகத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் பக்கத்து வீட்டு நண்பரான அஜித்குமார் என்பவருடன் பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கோஷ்டி மோதலாக மாறியது.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நால்வரை கைது செய்தனர். பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் நண்பனையே கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.