கடன் தொல்லை காரணமாக தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவம். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சதாசிவம் ஊரில் கடன் வாங்கி வந்துள்ளார். ஆனால், அவரால் கடனை சரிவர கட்டவிட முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவதன்று அதிகாலை அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.