கடும் பொருளாதார நெருக்கடி – தினசரி உண்ணும் உணவின் அளவை குறைத்த இலங்கை மக்கள்


இலங்கையர்களில் 66 வீதமானவர்கள் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மற்றும் அரசாங்கம் ஏப்ரல் மாதம் முன்னெடுத்த கூட்டு விரைவான உணவு பாதுகாப்பு மதிப்பீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 17 மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்களை கருத்திற்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டள்ளது.

இதன்படி, 86 சதவீதம் பேர் மலிவாக வாங்குதல் போன்ற சமாளிப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். 95 சதவீதம் பேர் குறைவான சத்தான உணவுகளை பெற்றுக்கொள்கின்றனர்.

83 சதவீதம் பேர் உணவு அளவுகளை கட்டுப்படுத்துவதுடன், 66 சதவீதம் பேர் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி - தினசரி உண்ணும் உணவின் அளவை குறைத்த இலங்கை மக்கள்

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 57 சதவீதமாக உயர்வு

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு, எரிபொருளுக்கான தட்டுப்பாடு மற்றும் அதிக விலைகள் காரணமாக மக்கள் தங்கள் அன்றாட உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய போராடுகின்றனர்.

சமீபத்திய பொருளாதார நெருக்கடியால் வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது, உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்கும் மக்களின் திறனை நேரடியாக பாதித்துள்ளது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 57 சதவீதமாக உள்ளது, இது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வெளிநாட்டு கையிருப்பு குறைவு, சாதகமற்ற மாற்று விகிதங்கள் மற்றும் குறைந்த உள்நாட்டு உணவு உற்பத்தி ஆகியவற்றால் உந்தப்படுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடி - தினசரி உண்ணும் உணவின் அளவை குறைத்த இலங்கை மக்கள்

இலங்கையில் முக்கிய தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டங்கள்

செப்டம்பர் மாதம் வரை 1.7 மில்லியன் மக்களின் மிக அவசரமான மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் சபை கோருகிறது. இதில், 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளுக்கானது.

சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆதரவுடன் அரசாங்கம் அதன் சமூக பாதுகாப்பு வலைத் திட்டத்தின் மூலம் 3.3 மில்லியன் மக்களுக்கு பணப் பரிமாற்றங்களை வழங்குகிறது.

எனினும், பல முக்கிய தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டங்கள் நிதி பற்றாக்குறையால் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.