பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை.!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத் துறை, மின்சாரத் துறை தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள், அறிவிப்புகளின் நிலை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.