50 நர்சுகளுக்கு பாலியல் தொல்லை| Dinamalar

போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நர்சுகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின், தலைநகர் போபாலில், ஹமிதியா அரசு மருத்துவமனை உள்ளது. இதன் கண்காணிப்பாளரான, டாக்டர் மாராவி, ஐம்பதுக்கும் மேற்பட்ட நர்சுகளுக்கு இரவுப் பணியின்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ம.பி., சுகாதார துறை அமைச்சர் விஸ்வாஸ் சரங் கூறியதாவது:ஹமிதியா மருத்துவமனையில் நர்சுகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படும் புகாரை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மண்டல ஆணையர் குல் ஷன் பாம்ரா, இந்த விசாரணையை மேற்கொண்டு, அரசிடம் அறிக்கை அளிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே தவறு செய்த டாக்டர் மாராவி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி ம.பி., காங்., தலைவர் கமல்நாத் வலியுறுத்தியுள்ளார். சமீப காலமாக பெண்கள் மீதான குற்றங்களில், ம.பி., முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.