உ.பி., அரசிடம் விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்| Dinamalar

புதுடில்லி: நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி உத்தர பிரதேசம் உள்பட பல இடங்களில் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையாளர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. சட்டவிரோதமான முறையில் வீடு கட்டியதால் கட்டடம் இடித்து தள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்னும் இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது பழிவாங்கும் நடவடிக்கையாக இல்லாமல், உரிய சட்ட விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரபிரதேச அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், வீடுகள் இடிப்பை எதிர்த்த வழக்கில் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உ.பி., அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.