பெரும்பாலான இளைஞர்களுக்கு ராணுவ பணி வாய்ப்பை மறுப்பதாக அக்னிபாத் திட்டம் உள்ளது; ப.சிதம்பரம்

டெல்லி: பெரும்பாலான இளைஞர்களுக்கு ராணுவ பணி வாய்ப்பை மறுப்பதாக அக்னிபாத் திட்டம் உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அக்னிபாத் என்ற 4 ஆண்டு கால ராணுவ பணி திட்டம் ஒன்றிய அரசால் அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது; அக்னிபாத் திட்டத்தை சோதனை அடிப்படையில் அமல்படுத்தி விளைவுகளை பார்த்த பின்பே அறிவித்து இருக்க வேண்டும்; இந்த திட்டம்  சர்ச்சைக்குரியது என்பதோடு பல ஆபத்துகளையும் உள்ளடக்கி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.