குறுகிய தூர எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும்: பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

சந்திப்பூர்: குறுகிய தூர எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் முற்றிலும் உள்நாட்டிலேயே பிருத்வி- 2 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள பாலசோர் சோதனை தளத்தில் நேற்றிரவு செலுத்தி சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் பெற்ற பிருத்வி- 2 ஏவுகணை, 350 கிமீ தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது. 1000 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களையும் சுமந்து செல்ல இதை பயன்படுத்த முடியும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.