காவல்நிலையத்தில் தற்கொலை முயன்ற சப் இன்ஸ்பெக்டர்..!

விஷமருந்தி சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் ஜேடர்பாளையம் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். இன்று காவல்நிலையத்திற்கு வந்த அவர் வாங்கி வைத்திருந்த விஷமருந்தி மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறெதேனும் காரணமான என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்நிலையத்திலேயே சப்- இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.