அக்னிபாத் போராட்டம்: வடமாநிலம் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில்,  வடமாநிலம் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிலகாட் டவுனில் இருந்து தாம்பரம் ( Silaghat Town to Tambaram) மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சில்சார் வரை ( Thiruvananthapuram to Silchar) சென்று திரும்பும் பின்வரும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்படுவ தாகவும் அறிவித்து உள்ளது.

மேலும், தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் அக்னிபாத் போராட்டங்களால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்ததுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.