இருசக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பேருந்து.. பரிதாபமாய் பலியான இளைஞர்..!

தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேராக ணோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், விளாங்காட்டுவலசில் இருந்து தனியார் பேருந்து  ஒன்று ஈரோடு வந்து கொண்டிருந்தது. அந்த சாலையில் எதிரே இரு வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த ஸ்கூட்டர் மீது பேருந்து மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் உயிரிழந்தவர் ஆர். சந்தோஷ் என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.