ஜூலியன் அசாஞ்சேவைநாடு கடத்த அனுமதி| Dinamalar

லண்டன்:அமெரிக்க அரசின் ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த, பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே, 50. பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான இவர், ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் வாயிலாக உலகின் பல்வேறு நாட்டு அரசுகளின் ஊழல்களை வெளியிட்டார். இதில், அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக அசாஞ்சே மீது வழக்கு தொடுக்கப்பட்டு, 2019ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த, பிரிட்டனின் உள்துறை செயலர் பிரீத்தி படேல் நேற்று அனுமதி அளித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.