சுருக்குமடி வலைக்கு தடை விதிப்பு; மத்திய, தமிழக அரசுகளுக்கு நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி: தமிழகத்தில் மீன்பிடிக்க, சுருக்குமடி வலைகளை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரிய மனு தொடர்பாக, மத்திய, தமிழக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில், தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் மீன்பிடி காலமே மூன்று மாதம் தான். சுருக்குமடி வலையை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையால், ௧௫ லட்சத்துக்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தடையை ரத்து செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டிருந்தது,இந்த மனு, நீதிபதிகள் போபண்ணா, விக்ரம் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதில் அளிக்க கோரி, மத்திய, தமிழக அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.